Wednesday, December 16, 2009

இஸ்மாயீல் ஸலபி அவர்கள் வெளியிட்ட பிரசுரம்.

பகிரங்க சவால் - ஒரு தெளிவு

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு உண்மை உதயம் இஸ்லாமிய இதழின் ஆசிரியர் எஸ்.எச்.எம். இஸ்மாயீல் ஸலபியின் ஸலாம்... அஸ்ஸலாமு அலைக்கும்.

தக்லீதையும், தனிநபர் வழிபாட்டையும் வளர்க்கும் நோக்கில் உருவான-உருவாக்கப்பட்ட ஒரு குழு உண்மை உதயம் ஆசிரியருக்குப் பகிரங்க சவால் என்ற தலைப்பில் என்னை விவாதத்திற்கு அழைத்து துண்டுப்பிரசுரம் வெளியிட்டிருந்தது. இது குறித்துச் சில தெளிவுகளை கொள்கைச் சகோதரர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்தப் பகிரங்க மடல் மூலம் உங்களைச் சந்திக்கின்றேன்.

என்னை விவாதத்திற்கு அழைத்தவர்கள் அந்தப் பிரசுரத்தை எனக்கு அனுப்பாமல் கொழும்பு, எலபடகம, அக்குரணை போன்ற இடங்களில் பங்கிட்டுள்ளனர். அவர்களிடம் நியாய உணர்விருந்தால் எனக்கல்லவா அனுப்ப வேண்டும்? அவர்கள் இந்தப் பிரசுரம் மூலம் பரபரப்பையும், பப்ளிசிடியையும் ஏற்படுத்த விரும்பியுள்ளனர் என்று இதன் மூலம் தெளிவாகின்றது. அதிரடி அரசியல் வாக்கில் ஆதாயம் தேட முற்பட்டுள்ளனர். இவர்களைப் புறக்கணிக்காமல் அழைப்பை ஏற்பது அவர்களது கீழ்த்தரமான உணர்வுக்கு உதவுவதாக அமைந்து விடும்.

உண்மை உதயம் எனும் பெயரில் இருளை உதயமாக்கும்... என்று எழுதியுள்ளனர். உண்மை உதயம் 1955 இல் உதயமான குர்ஆன்-ஸ{ன்னாவைப் போதிக்கும் பத்திரிகையாகும். எனது பொறுப்பில் இதுவரை 114 இதழ்கள் வெளிவந்துள்ளன. பீஜேயின் ஒரு கருத்துக்கு முரணாக ஒரு கட்டுரை எழுதியதற்காக இருளை உதயமாக்கும் என்று எழுதியுள்ளனரே! அப்படியென்றால் இதுவரை நான் எழுதிய குர்ஆன்-ஹதீஸ் அனைத்தும் பீஜேயின் ஒரு கருத்துக்கு முரண்பட்டு எழுதியதால் இருளாகி விட்டனவா? குர்ஆன்-ஹதீஸ் மீது பற்றோ, பாசமோ உள்ள எவராவது இப்படி எழுதுவார்களா? பீஜே மீது கொண்ட தக்லீதின் காரணத்தால், அவருக்கு முரணாக ஒருவன் கருத்துச் சொன்னால், அவனது அனைத்துக் கருத்தையும் மறுக்கும் வெறி கொண்ட மனோபாவத்தில் இருக்கும் இவர்களைப் புறக்கணிப்பதே இஸ்லாமிய வழி என்று நான் கருதுகின்றேன்.

அல்லது இதுவரை உண்மை உதயம் இருளைத்தான் உதயமாக்கி வந்தது என்றால் ஏன் இதற்கு முன்னர் இவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை? என்று சிந்தித்துப் பாருங்கள்! ஆம். நீங்கள் குர்ஆன்-ஹதீஸ{க்கு முரணாக எழுதினாலும் பிரச்சினை இல்லை@ பீஜே க்கு முரணாக எழுதினால் விட மாட்டோம் என்ற முற்றிப்போன பீஜே பக்தி இவர்களிடம் இருப்பதை உணரலாம்.

~மறுக்கப்படும் ஆதாரப+ர்வமான ஹதீஸ்கள்| எனும் தலைப்பில் மறுக்கப்படவேண்டிய கருத்துக்களைச் சொல்லி இருந்தது உங்கள் உண்மை உதயம் என்று எழுதியிருந்தனர். மறுக்கப்படவேண்டிய கருத்து எது? பீஜே காதியானிகளுடன் விவாதம் செய்ததையா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி செய்ததையா? அல்லது ஆரம்பத்தில் குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படாது@ முரண் போல் தோன்றினாலும் முரண் இருக்காது என்று கூறியதையா? அல்லது பீஜே சூனியம் என்றால் வெறும் தந்திரவித்தை என்று கூறுவதை நான் மறுத்ததையா?

பீஜேயை ~ஹவாரிஜ் முஃதஸிலா| என்று கூறுமளவில் இருந்தது அந்த ஆய்வு என்று குறிப்பிட்டுள்ளனர். நான் எனது கட்டுரையில் அப்படிக் குறிப்பிடவில்லை. பகிரங்கமாக எழுதிய விடயத்திலேயே துணிந்து அவதூறு கூறும் இவர்களின் இலட்சணம் எப்படி இருக்கும்? என்று சிந்தித்துப் பாருங்கள்!

நான் எழுதிய மார்க்கத்துக்கு முரணான எந்த அம்சத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டாமல், பீஜேயை ஹவாரிஜ் முஃதஸிலா என்று கூறும் அளவில் இருந்தது அந்த ஆய்வு என்று கூறியிருப்பதிலிருந்து, இவர்களுக்கு மார்க்கம் பிரச்சினையில்லை@ பீஜேயைப் பாதுகாப்பதே இவர்களின் இலட்சியம் என்பது தெளிவாகின்றதல்லவா?

சூனியம் எனும் வார்த்தை எத்தனை இடத்தில் இருக்கிறது என்பதை மட்டுமே ஆய்வு காட்டியது. (ஆய்வு என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி) மிகுதி எல்லாம் சுத்த-சூனியம் என்பதுதான் வாசித்தோருக்குத் தெரியும் என்று எழுதியுள்ளனர். ஆனால், அவர்களது நிகழ்ச்சி நிரலைப் பார்த்தால் அதில்தான் எலபடகம, அக்குரணை, சிலாபம் என சுத்த-சூனியமாக இருந்தது!
நமது ஒரு கட்டுரைக்கு மறுப்பாக அமைய, தமிழ் நாட்டிலிருந்து வந்த இரண்டு ஹதீஸ் கலை ஆய்வாளர்கள் நான்கு இடங்களில் பேசவேண்டி ஏற்பட்டதென்றால், அந்தக் கட்டுரை அவர்களை எவ்வளவு கதிகலக்கியுள்ளது என்பது கொள்கைச் சகோதரர்களுக்குப் புரியும். உங்கள் நிகழ்ச்சி ஏற்பாடும், துண்டுப்பிரசுரமும் அந்தக் கட்டுரை சுத்த-சூனியமல்ல@ உங்களது சூனியம் குறித்த குருட்டு வாதங்களிலிருந்து மக்களைக் காக்கும் ஆய்வு என்பதையே உணர்த்துகின்றது!

அடுத்து, அந்த மூன்று பேரின் முடிவுதான் உண்மை உதய வாசகர்களின் முடிவு என்று எண்ணி எழுதியிருப்பது இவர்களின் அறியாமையை அம்பலப்படுத்துகின்றது.

~நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லை@ எவராலும் செய்யவும் முடியாது@ இதுவே தௌஹீத் ஜமாஅத்தின் ஆணித்தரமான நிலைப்பாடாகும்| என்று எழுதியுள்ளனர். நான் பீஜேயின் சூனியம் என்றால் தந்திர வித்தை என்ற தவறான வாதத்திற்கே இதுவரை விளக்கம் எழுதியுள்ளேன். இவர்கள், நபி (ஸல்) அவர்களின் சூனியம் விடயத்திற்கு ஏன் தாவினர்? எழுதாத விடயத்திற்கு ஏன் விவாதத்திற்கு அழைக்கின்றனர்? என சகோதரர்கள் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். பீஜேயின் இந்தக் கருத்தில் அவர்களுக்கோ தமிழகத்திலிருந்து வந்தவர்களுக்கோ தெளிவு இல்லை என்று நான் துணிந்து கூறுவேன்.

தௌஹீத் ஜமாஅத்தின் கருத்து என்று நேற்று முளைத்தவர்கள் கூறுகின்றனரே! இது நியாயமானதா? நாமும் தௌஹீத் ஜமாஅத்துத்தான். ஷபாப்இ ஐஐசுழுஇ யுஊவுதுஇ ஐயுவு அனைவரும் தௌஹீத்வாதிகள்தாம். இப்படி இருக்க, அவர்கள்தான் தௌஹீத்வாதிகள் என்ற அடிப்படையில் எழுதி, இந்த நாட்டின் தௌஹீத் பிரச்சார வரலாற்றையே திருட முனையும் இவர்கள் எப்படி நியாயமானவர்களாக இருப்பார்கள்?

தௌஹீத் ஜமாஅத் பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது என்று எழுதியுள்ளனரே! அப்படியென்றால் நான் எந்த ஜமாஅத்?

பீஜே என்ன எழுதினார் என்பது எல்லோருக்கும் தெரியும்@ நான் என்ன எழுதுகிறேன் என்பதைப் பார்த்துத்தானே முடிவு செய்ய வேண்டும்? நான் என்ன எழுதுவேன் என்று தெரியாமலேயே விவாதத்திற்கு அழைக்கின்றனர் என்றால் அடுத்தவரின் கருத்தைக் கவனத்திற் கொள்ளும் போக்கே இவர்களிடத்தில் இல்லை என்பதுதானே அர்த்தம். எனவே, கண்ணியத்திற்குரிய கொள்கைச் சகோதரர்களே!

‘ அர்ரஹ்மானின் அடியார்கள் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் தர்க்கித்தால், 'ஸலாம்" எனக் கூறுவார்கள். (25:63)

‘ (நபியே!) நீர் மன்னிப்பைக் கடைப் பிடித்து, நன்மையை ஏவி, அறிவீனர்களைப் புறக்கணித்து விடுவீராக! (7:199)

ஆகிய ஆயத்துக்களின் அடிப்படையில் இவர்களைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன். இதன் பின்னர் இவர்களது எந்த விமர்சனத்திற்கும் என்னிடம் விளக்கம் எதிர்பார்க்காதீர்கள். இவர்களைப் புறக்கணித்து விட்டு, எனது பணிகளை நான் தொடர முடிவு செய்துள்ளேன். முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையும், முஃமின்களுக்கு தீங்கிழைப்பதையும் நோக்கமாகக் கொண்டு முனாஃபிக்குகளால் கட்டப்பட்ட பள்ளியில் தொழ வேண்டாம் என அல்லாஹ் தடுக்கின்றான்(9:107). தௌஹீத்வாதிகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதற்காகவும், தௌஹீத் சகோதரர்களுக்குத் தீங்கிழைப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட இந்தக் குழுவை, நீங்களும் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்று அன்புடனும், உரிமையுடனும், பணிவுடனும் வேண்டிக் கொள்கின்றேன்.

இப்போது இந்தக் குழுவை வழிநடத்துவோர் 'மேமன் தௌஹீத் ஜமாஅத்" என்ற பெயரில் ஆரம்பத்தில் தௌஹீத்வாதிகளை இனவாரியாகப் பிரிக்க முற்பட்டவர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு இவர்களைப் புறக்கணியுங்கள். மற்றப்படி உண்மை உதயத்திற்கு இலவச விளம்பரம் தந்ததற்காக இவர்களுக்கு நன்றி கூறி மடலை நிறைவு செய்கின்றேன்.

அன்புடன்
ளு.ர்.ஆ. இஸ்மாயீல் (ஸலபி)
உண்மை உதயம்
இஸ்லாமிய மாத இதழ்