Friday, April 16, 2010


மவ்லவி இஸ்மாயீல் ஸலபி அவர்களுக்கு ஓர் மனந்திரந்த மடல்.
அன்பின் சகோதரர் இஸ்மாயீல் ஸலபி அவர்களுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும்………………….
அல்லாஹ்வுடைய அமைதியும்,கருணையும் உங்கள் மீது உண்டாகட்டுமாக.
இந்த மாத
(2010.04)
உண்மை உதயம்(?) பத்திரிக்கையில் தாங்கள் எழுதியுள்ள கட்டுரை தொடர்பாக இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்னால் சூனியம் தொடர்பான கட்டுரையை நீங்கள் எழுதும் நேரத்தில் அந்தக் கட்டுரைக்கு சகோதரர் பி.ஜெ அவர்கள் பதில் எழுத ஆரம்பிப்பதற்கு முன்பாக நான் தொடர்சியாக உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் பதில் எழுதினேன்.ஆனால் அந்தக் கட்டுரைகளுக்கு நீங்கள் பதில் தருவதை விட்டு விட்டு உண்மை உதயத்தில் தொடராக உங்கள் கட்டுரைகளை பிரசுரம் செய்தீர்கள்.அதையே எனக்கும் பதிலாக அனுப்பவும் செய்தீர்கள்.

ஆனால் அந்த கட்டுரைகளில் நான் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் இருக்கவில்லை என்பது உங்களுக்கே நன்கு தெரிந்த விஷயம்.

அத்துடன் அந்த ஒவ்வொரு கடிதத்திலும் நான் கிட்டத்தட்ட நான்கு கேள்விகளை தொடராக வைத்துவந்தேன் அதில் ஒன்ருக்குக்கூட நீங்கள் பதில் தரவில்லை என்பதையும் இந்த நேரத்தில் ஞாபகப்படுத்துகிறேன்.

இப்போது இந்த மாத உண்மை உதயத்தில்(?) இடம் பெற்றிருக்கும் அன்புள்ள அல்ஹஸனாத்திற்கு! நினைக்க மறந்ததேனோ? என்ற கட்டுரை தொடர்பான சில முக்கிய விஷயங்களை எழுத முனைகிறேன்.
முதலாவதாக தாங்கள் கைப்பட எழுதியிருக்கும் அந்தக் கட்டுரை எழுதப்; பட்ட நோக்கத்தை நீங்களே கூறியுள்ளீர்கள்.

அதாவது அல்ஹஸனாத்(?)என்ற மாத இதல் தனது
40 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஒரு சிறப்பு இதழை வெளியிட்டுள்ளது.அந்த இதழில் ஜமாஅத் உருவாக்கத்தோடு அதன் அச்சு ஊடகத்தின் வளர்ச்சியும் ஆரம்பித்து விட்டது என்ற தலைபில் எழுதப் பட்ட கட்டுரையில் உள்ள ஒரு குறையை(?)சுட்டிக்காட்டுவதாக சொல்லி தாங்கள் யார் என்பதை தவ்ஹீத் வாதிகளுக்கு காட்டிவிட்டீர்கள்.(அல்லாஹ் காட்ட வைத்து விட்டான்.அல்ஹம்து லில்லாஹ்)

அதாவது அல்ஹஸனாத்(?)இதழ் ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் இலங்கையில் வெளிவந்த பத்திரிக்கைகளின் பெயர்களை கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் அதில் உண்மை உதயம்(?)பற்றிக் குறிப்பிடவில்லை.

அதனால் உண்மை உதயம்(?) ஜமாத்தே இஸ்லாமியுடன் எப்படி நட்பு வைத்திருந்தது ஆனால் நீங்களோ(அல்ஹஸனாத் நிர்வாகம்)எங்களை மறந்து விட்டீர்கள்.அப்படி மறந்த காரணத்தால் எங்களுக்கும் உங்களுக்கும் இருந்த உறவு என்ன அதாவது ஆரம்பகால தஃவாவில் நாம் எப்படி இணைந்திருந்தோம் என்பதை உங்களுக்கு ஞாபகப் படுத்துகிறோம் என்கின்ற தொணியில் அந்தக் கட்டுரையை எழுதியுள்ளீர்கள்.

முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்பதை மறந்து விட்டீர்கள் போலும்…………..??????????????

அல்லாஹ் கூறியுள்ள ஒரு வார்த்தையை நினைவு படுத்தகிறேன்.
(17:81) وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
உண்மை வந்து விட்டது பொய் அழிந்து விட்டது நிச்சயமாக பொய் அழிந்தே தீரும்
(17:81)

சில காலங்களுக்கு முன்னால் வரை மார்க்கத்தை மக்களுக்கு மத்தியில் தெளிவாக சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் ஏன் திடீரென்று ஒற்றுமைக் கோஷம் போடுபவர்களுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்தீர்கள் என்று நான் பல முறை எண்ணியதுண்டு.

அந்த சந்தேகம் இந்த மாத உண்மை உதயத்தை பார்த்தவுடன் எனக்கு தெளிவாகிவிட்டது.

இதற்கு முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் இலங்கைக் கிளை உங்களைப் பற்றி துண்டுப் பிரசுரம் வெளியிட்ட நேரத்தில் தாங்கள் ஜமாத்தே இஸ்லாமி(?)யின் கருத்தை பிரச்சாரம் செய்பவர்தான் என்று தெளிவாக கூறினார்கள்.அதை இந்தக் கட்டுரையின் மூலம் தாங்களே ஒத்துக் கொண்டுள்ளீர்கள்.

அல்ஹஸனாத்(?)உங்கள் பத்திரிக்கையின் பெயரை வெளியிடவில்லை என்பதற்காக ஆதங்கப்பட்ட நீங்கள் உங்கள் பத்திரிக்கையில் ஜமாத்தே இஸ்லாமி(?)பற்றி வெளியிட்ட செய்திகளையும்,அவர்களின் எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளையும் ஸ்கேன் செய்து வெளியிட்டுள்ளீர்கள்.

அப்படியென்றால் பல காலமாக ஜமாத் அன்ஸார் ஸ{ன்னதில் முஹம்மதிய்யா என்ற பெயரால் நீங்கள் ஜமாத்தே இஸ்லாமியின் அறிவிக்கப்படாத கிளையாக இயங்கினீர்களா???????????

1956ம் ஆண்டு
4 ம் மாதம்
28ம் தேதி ஜமாத்தே இஸ்லாமியின் கூட்டம் நடை பெற்ற செய்தியை 1956.05.15ம் தேதி வெளியான உண்மை உதயத்தில்(?)பிரசுரித்ததாக தாங்கள் எழுதி அதன் ஸ்கேன் பிரதியையும் அதில் இணைத்துள்ளீர்கள்.

அல்லாஹ் வெளிக்காட்டினான்.
அந்த ஸ்கேன் செய்யப்பட்ட பிரதியை நன்றாக மீண்டும் ஒரு முறை நீங்களே பாருங்கள் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது.
ஜமாத்தே இஸ்லாம்.

கடந்த
28-04-56 சனி பின்நேரம் இரவு
10 மணியிலிருந்து நடுநிசி
1.30 மணி வரை ஜமாத்தே இஸ்லாமி இலங்கை.யின் ஓர் விசேஷக் கூட்டம் கொழும்பு பீர் ஸாயிபு தெருவிலுள்ள அல்ஜிஹாத் புக் ஸ்டாலில் கூடிற்று.அவ்வமயம் ஜனாப் பி.எம் யூசுப் ஸாஹிபவர்கள் தலைமை வகித்தார்கள்.

பாத்திஹா ஓதப் பட்டு கூட்டம் ஆரம்பமாயிற்று மவ்லவி யூ.எம் தாஸின் பாஸி,நத்வி அவர்கள் இன்றைய முஸ்லீம்களின் கடமையும்,அதில் முஸ்லீம்களின் பங்கும் எனும் மகுடத்தில் ஓர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.(அதன் சாரம்சம் வேறொரு முறை இப்பத்திரிக்கையில் இடம் பெரும்)

இதுதான் தங்கள் பத்திரிக்கை
1956ல் ஜமாத்தே இஸ்லாமி தொடர்பாக வெளியிட்ட செய்தி
மேற்கண்ட அந்தச் செய்தியில் பாத்திஹா ஓதப்பட்டு கூட்டத்தை ஆரம்பித்ததாக தாங்கள் ஆசிரியராக கடமையாற்றும் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.பாத்திஹா ஓதி கூட்டத்தை ஆரம்பிப்பதற்கு மார்க்கத்தில் எங்காவது ஆதாரம் உள்ளதா?

அத்துடன் அதைத் தொடர்ந்து இன்னும் பல செய்திகளையும் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

அதாவது மேற்படி ஜமாஅத் உருவாக்கத்தோடு அதன் அச்சு ஊடகத்தின் வளர்ச்சியும் ஆரம்பித்து விட்டது என்ற கட்டுரையை எழுதிய ஏ.எல்.எம் இப்றாஹீம்(கபூரி) உண்மை உதயத்தில்(?)ஏற்க்கனவே பல கட்டுரைகளை வரைந்ததாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.

அதுமட்டுமன்றி உண்மை உதயம்(?)ஜமாத்தே இஸ்லாமியின் முக்கிய உறுப்பினர்களுக்கு எழுத்துத் துறைக்கான களம் அமைத்துக் கொடுத்தது.இதனால் ஜமாத்தே இஸ்லாமியின் செய்திகள் அதில் இடம் பெற்றன.என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

அப்படியாயின் தாங்கள் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர் அன்ஸார் ஸ_ன்னா தவ்ஹீத் பிரச்சாரம் செய்கிறது என்றெல்லாம் சொல்லிவிட்டு முழுக்க முழுக்க ஜமாத்தே இஸ்லாமியின் கருத்துக்களை மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்துள்ளீர்கள்.என்பதில் உங்களுக்கே மாற்றுக் கருத்தில்லை……………..

அத்துடன் இன்னுமோர் முக்கிய விஷயத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த நினைக்கிறேன்.
அதாவது எந்த மவ்தூதி இஸ்லாத்திற்கு எதிராக பல கருத்துக்களை சொல்லியுள்ளாரோ அதே மவ்தூதியின் பல கட்டுரைகளையும் தமிழ்ப் படுத்தி உங்கள் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளீர்கள்.
இதுதான் தவ்ஹீத் என்ற கொள்கைக்கும்,உங்களை தவ்ஹீத் வாதி என நம்பிக் கொண்டிருக்கும் மக்களுக்கும் நீங்கள் காட்டும் விசுவாசமோ???????????............
நீங்கள் இப்படியெல்லாம் விசுவாசமாக நடந்ததால் தான் உங்களுக்கும் உங்கள் பாசமிகு அமீருக்கும் புத்தளத்தில் வைத்து ஜமாத்தே இஸ்லாமி நடத்திய இளைஞர் மாநாட்டில் விருது தந்தார்கள் போலும்.

அதனால் தான் இன்றைக்கும் அல்ஹஸனாத்தில் உண்மை உதயத்தின்(?)பெயரைக் குறிப்பிட மறந்ததற்கு நீங்கள் கவலைப் படுகிறீர்கள்…பாவம் அடுத்த இதழில் பெரும்பாலும் ஜெமாத்தே இஸ்லாமி(?) வருத்தப் பட்டு உங்கள் பெயரையும் உங்கள் இதழின் பெயரையும் குறிப்பிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

அல்லாஹ்வே உங்களுக்கு நேர் வழிகாட்ட போதுமானவன்.
இவன்.
RASMIN MISc (India)
Ph: 0094712714739(Srilanka)
00919894488991(India)

Thursday, April 8, 2010



தீன்குலப் பெண்களே! உங்களைத்தான்!

சகோ அப்துந் நாஸர் M.I.Sc

அன்பிற்குரிய தாய்மார்களே! சகோதரிகளே! பெண்கள் நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு தொகுத்துள்ளோம். இதனைக் கடைப்பிடித்து வாழக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நாம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக!

'இவ்வுலகம முழுவதும் செல்வமாகும். இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் சிறந்நது நல்லொழுக்க முள்ள பெண்ணாவாள். ' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ் ம் (2668)

வீதியில் செல்லும்போது பார்வைகளைத் தாழ்த்திச் செல்லவேண்டும்

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24 : 31)

பர்தாஅணிந்துதான் வெளியே செல்லவேண்டும்

அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24 : 31)

. நபியே! (முஹம்மதே!) உமது மனை வியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது'' என்று கூறுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான் (அல்குர்ஆன் 33 : 59)

தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக, அரை குறை ஆடை அணிந்து, பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) ஒய்யாரமாகத் தளுக்கிக் கொண்டு செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள். (ஐம்பது ஆண்டுகள் அல்லது) எவ்வளவு ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால், இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ் ம் 3971)

கால்களில் ஒளி எழுப்பும் சலங்கைகள் அணிந்து வெளியில் செல்லக்கூடாது

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24 : 31)

பள்ளிவாசலுக் செல்லும் போது வாசனைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பெண்களாகிய நீங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது நறுமணம் பூசாதீர்கள் (முஸ் ம் 759)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (பெண்களே) நீங்கள் இஷாத்தொழுகையில் கலந்து கொள்ள பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள். (முஸ் ம் 758)

அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசக்கூடாது

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (அல்குர்ஆன் 33 : 32,33)

தேவையில்லாமல் தெருக்களில் சுற்றித் திரியக் கூடாது

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். (அல்குர்ஆன் 33 : 32,33)

ஆணும் பெண்ணும் தனித்திருக்கக் கூடாது

ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர. ஒரு பெண் மணமு‎டிக்கத் தகாத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபி (‏ஸல்) அவர்கள் கூறினார்கள். ( முஸ் ம் 2611 )
பெண்கள் தவிர்க்கவேண்டியவை

பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றிக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன்பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் ஆகியோரின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 4886)

ஒட்டு (முடியாலான சவுரி) வைத்துக் கொள்ளும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள் (புகாரி 4887)

பெண்களே அதிகமாக தர்மம் செய்வீர்

நபி (ஸல்) அவர்கள் பெண்கள் சமூகமே தான தர்மம் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில் அதிகமாக இருப்பது நீங்கள்தான் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே ஏன்? என்று அப்பெண்கள் கேட்டனர். அதற்கு நீங்கள் அதிகமாக சாபமிடுகிறீர்கள். கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள். மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றிவிடக் கூடியவர்களாக உங்களை விட வேறுயாரையும் நான் காணவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி 304 )