அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே ! இணையத்தள வாசகர்களே !
அல்லாஹ்வின் திருப் பெயரால்…..
அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே ! இணையத்தள வாசகர்களே !
உண்மை உதயமாகிறது என்ற இந்த இணையத்தளத்தின் முலமாக உதயமாகாத பல உண்மைகளை நாம் வெளிக்கொணர எண்ணியுள்ளோம்.அந்த வகையில் இலங்கையில் தஃவாக் களத்தில் தாஇகளாக தங்களை இணங்காட்டிக் கொண்டிருக்கும் சிலர் உண்மையான மார்க்கத்தை மக்களுக்கு சொல்வதற்குப் பதிலாக ஓடி ஒழிந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
இவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் ?
இவர்கள் சொல்வது சத்தியம் என்றால் மக்கள் மன்றத்தில் விவாதிக்களாமே !
விவாதிப்பதற்க்கு இவர்கள் பயப்படுவதிலிருந்து இவர்கள் சத்தியத்தில் இல்லை மக்களைக் குழப்புவதற்க்காகத்தான் இப்படி செய்கிறார்களோ என பாமர மக்கள் எண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
இப்படிப் பட்டவர்களிடம் செய்யப் பட்ட கருத்துப் பரிமாற்றங்கள் கட்டுரைகளாகவும், வீடியோ, ஆடியோப் பதிவுகளாகவும் மக்கள் மன்றத்தில் எத்திவைப்பதற்க்காகவே இந்த இணையம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது என்பதை மிகவும் அன்பாய்த் தெரிவித்துக் கொள்கிறோம்.
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்